முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம்: யாழில் மாபெரும் மக்கள் எழுச்சி இன்று!

0
281

முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் இன்றையதினம் (04-10-2023) மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார் மடத்தில் இன்று (04-10-2023) காலை 9 மணியளவில் ஆரம்பமாகி யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு மாகாண சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ் வணிகர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இன்றைய தினம் மாலை அறிவித்துள்ளது.

இன்று இடம்பெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழின் முக்கிய பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்திற்கான ஆதரவை திரட்டியமை குறிப்பிடத்தக்கது.