இந்தியா வருவதை உறுதி செய்தார் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ

0
232

பிரபல கால்பந்து நட்சத்திரமும், பிரேசிலிய உலகக் கோப்பை வெற்றியாளருமான ரொனால்டினோ, துர்கா பூஜை விழாவை முன்னிட்டு இந்தியா வருவதை உறுதி செய்துள்ளார். மூன்று முறை Ballon d’Or விருதை வென்றுள்ள ரொனால்டினோ இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.

“அனைவருக்கும் வணக்கம், இந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் நான் கொல்கத்தாவிற்கு எனது முதல் பயணத்தை மேற்கொள்கிறேன்” என்று 43 வயதான அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கொல்கத்தாவில் பிரேசில் இரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பதை நான் அறிவேன். அவர்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து “ஜெர்சியை பரிசாக” வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா தாதா என அன்பாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியிடம் இருந்து கிரிக்கெட் கற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கிரிக்கெட் மிகவும் பிரபலமானது என்பதை நான் அறிவேன், இந்த முறை நான் கொல்கத்தா ‘தாதா’விடம் இருந்து கிரிக்கெட் கற்க விரும்புகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் கொல்கத்தா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாக்காவுக்குச் செல்வதற்கு முன் இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.