தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர் நியமனம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் குற்றச்சாட்டு

0
192

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவான ஊழியர்கள் அரசியல் நியமனங்கள் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வாய்மூல கேள்வி பதிலின்போது கருத்துரைக்கையிலே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் 70 வீதமான பணியாளர்கள் தகுதியற்ற பணியாளர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பல பிரிவுகளில் பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் சில பிரிவுகளில் பணியாளர்கள் அதிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த பின்னணியின் அடிப்படையில் புதிய ஊழியர்களை நியமிப்பதற்கான எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.