ஈழத்தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பல்லரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது கையில் , தியாக தீபம் திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞனின் கையிலையே பச்சை குத்தி இருந்தது.
இந்நிலையில் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.