ஆசிய கிண்ண இறுதிப் போட்டி; இலங்கையின் முக்கிய வீரர் நீக்கம்

0
261

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷன இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காயம் காரணமாக நாளை இடம்பெறவுள்ள போட்டியில் அணியில் அவர் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து இலங்கையின் முக்கிய வீரர் நீக்கம் | Deekshana Expelled From The Sri Lankan Team

இதேவேளை, அவருக்கு பதிலாக அணியில் சஹான் ஆராச்சிகே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நாளையத்தினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.