இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டிய நடிகர் விஜய் ரசிகர்கள்! கடும் சர்ச்சை

0
285

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை இயக்குனர் மிஷ்கின் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “லியோ” திரைப்படம் நல்லா வந்திருக்கு.

விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சுருக்கு” என கூறினார். விஜய் மீதான பாசம் மற்றும் நெருக்கம் காரணமாக அவரை ”பார்த்திருக்கான்” என மிஷ்கின் ஒருமையில் கூறியிருந்தார்.

இதை விஜய் ரசிகர்கள் சிலர் வேறு விதத்தில் எடுத்து கொண்டு எப்படி எங்கள் தளபதியை அவன், இவன் என்று ஒருமையில் மிஷ்கின் பேசலாம். இதற்கு கடும் கண்டனங்கள் என கூறி வருகின்றனர்.

அதிலும் சில விஜய் ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளது அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அரசியலுக்கு வர தயாராகும் நேரத்தில் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இப்படி செய்யலாமா என்பதே பலரின் கருத்தாக உள்ளது.