ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள நான்கு பேர்!

0
208

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராஜீவ் காந்தி கொலை : இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள நான்கு பேர்! | Rajiv Gandhi Murde Case Four Deported To Sri Lanka

இவ்வாறான நிலையில் முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

4 பேரின் கடவுச்சீட்டு ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.