குழந்தை நடிகை ஒருவரின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதாக 15 வயது இளைஞன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, பெலியத்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (24-08-2023) பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த காணொளி தொடர்பில் சிறுமியின் தாயாரால் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து புதன்கிழமை (23-08-2023) குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேள்விக்குரிய வீடியோவை ஒரு வாட்ஸ்அப் குழுவில் பரப்பியதை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார். அதை மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெற்றதாகச் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த காணொளியை அனுப்பியது யார் என்பதை சந்தேக நபர் வெளியிடவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.