சீனாவில் நூடில்ஸ் வாங்க சென்ற நபரை கடைக்காரர் அவமானப்படுத்தியதால், கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கி தரையில் போட்டு அடித்து நொருக்கி அழித்த சாம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சீனாவின் சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் சென்றுள்ளார்.
அவமானப்படுத்திய கடைக்காரர்
அங்கு கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என கூறியுள்ளார். அதை கேட்ட வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.
இதனையடுத்து வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விற்பனையாளரின் மகன் எழுந்து வந்து வாடிக்கையாளரிடம், உங்களால் அதை வாங்க முடியாது என்றால் வெளியே போங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.
கடைக்காரரால் இந்த கூச்சலால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் தான் அவமானப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து உடனே அவர் கடைக்காரரிடம் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளும் சேர்ந்து என்ன விலை என கேட்டார். அதற்கு அவர் ரூ.9,920 என கூறினார்.
உடனே அந்த பணத்தை கொடுத்து அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கிய வாடிக்கையாளர் அவை அனைத்தையும் தரையில் அடித்து நொருக்கி அழித்து தனது ஆத்திரத்தை தீர்த்துள்ளார். இந்த நிலையில் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.