முல்லைத்தீவில் காணப்பட்ட மேலும் பல மனித எச்சங்கள்!

0
221

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்று (06-07-2023) இடம்பெற்றன.

குறித்த அகழ்வு பணிகளின் போது மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்று ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவில் காணப்பட்ட மேலும் பல மனித எச்சங்கள்! அச்சத்தில் மக்கள் | More Human Remains Identified In Mullaitivu

இதேவேளை, பிளாஸ்ரிக் பொருள், வையர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.  

இன்றைய அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வு பணிக்காக தற்காலிக அணைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் காணப்பட்ட மேலும் பல மனித எச்சங்கள்! அச்சத்தில் மக்கள் | More Human Remains Identified In Mullaitivu

எதிர்வரும் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிலளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.