யுத்த காலத்தின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை செய்வீர்களா என்ற கேள்விக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் கூறியுள்ளதாவது,
எந்த குற்றச்சாட்டுகளையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
விசாரணைக்கு அழைக்கலாம்
ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கூட குற்றஞ்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூடிமறைக்கின்றது என எவரும் தெரிவிக்க முடியாது. வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் காணப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.