வடக்கின் 5 மாவட்டங்களின் வளர்ச்சிக் குழுக்களுக்கு இணைத் தலைவராக ஆளுநர் நியமனம்

0
162

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி செயலகம், வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் இணை தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக அந்த மாவட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடமையாற்றுகின்றனர்.

எனினும் சில மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் ஆளுநர் கலந்துக்கொள்ளாத காரணத்தினால் ஜனாதிபதி செயலகம், ஆளுநரை, இணை தலைவர் பதவிக்கு நியமித்துள்ளது.