தங்கள் 49வது பிறந்தநாளை கொண்டாடும் தேவயானி மற்றும் விஜய்

0
193

முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தேவயானி பெங்காலி மொழி படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மலையாளம், இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதேநேரம் தமிழில் முதல் படத்திலேயே கார்த்திக்குடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி தொட்டாசிணுங்கி படத்தில் அறிமுகமான தேவயானி ‘நீ வருவாய் என’ படத்தில் நடித்தபோது இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் மலர இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை தேவயானி தனது குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இதேவேளை, இன்று நடிகர் விஜய்யும் பிறந்தநாள் கொண்டாடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.