காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழா! வந்தடையவுள்ள பெரிய சொகுசு கப்பல்

0
222

யாழ். காங்கேசன்துறை துறைமுகம் நாளைமறுதினம் (17.06.2023) துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறந்து வைக்கப்படவுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கும் விடுதி, குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழா! வந்தடையவுள்ள பாரிய சொகுசு கப்பல் | Kankesanthurai Port Opaning Jaffna

துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர், திணைக்களப் பணிப்பாளர், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளடங்கிய குழு நாளைமறுதினம் காங்கேசன்துறைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இதேநேரம் இந்தக் குழுவினர் காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழாவின் பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படவுள்ளது.

மேலும், சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள பயணிகள் சொகுசுக் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை(17.06.2023) காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

சென்னை சொகுசுக் கப்பல்

காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழா! வந்தடையவுள்ள பாரிய சொகுசு கப்பல் | Kankesanthurai Port Opaning Jaffna

சென்னை துறைமுகத்தில் இருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைத்தந்த குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்குச் சென்று பின்னர், காங்கேசன் துறை துறைமுகம் சென்று திரும்பும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை காங்கேசன்துறை செல்லவுள்ளது என்றும், அதை வரவேற்பதற்காக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.