பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லண்டன் சுவாமி பற்றிய மேலும் தகவல்கள்!

0
960

பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கடந்த 09.06.2023 அன்று பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முரளி கிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கோரியிருந்த பிணை மறுக்கப்பட்டு மீண்டும் காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

குறிப்பிட்ட சாமியாரை பிணை எடுப்பதற்காக பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பிரித்தானியாவில் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு பிணை வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற கடுமையான நடைமுறைகள் காரணமாக அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

அடுத்த மாதம் 10 திகதியளவில் அவர் Crown Court இல் முன்னிலைப்படுத்தப்படும் வரை காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் கூறப்படுகின்றது. அதேவேளை பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்களுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட சாமியார் மீது அடுக்கடுக்காக மேலும் பல குற்றச்சாட்டுக்களும் புலம்பெயர் தமிழர்களால் சுமத்தப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள், குடிவரவு குடியகல்வு சட்டமீறல் குற்றச்சாட்டுக்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுவருகின்றன.

சில புலம்பெயர் அமைப்புக்கள் சாமியாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்டவர்களிடம் சேகரித்து அவற்றினை காவல் துறையினரிடம் வழங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இது இவ்வாறு இருக்க சாமியார் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் எதுவுமற்ற தவறான குற்றச்சாட்டுக்கள் என்று கைது செய்யப்பட்டுள்ள சாமியாரின் நிறுவனமான ‘ஓம் சரவணபாவா சேவா அறக்கட்டளை’ தெரிவித்துள்ளது.

சாமியாரின் கைது பற்றி அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரத்தை ஆராயாமல் இருக்க உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தொடர்புகொள்ள வேண்டாம், அல்லது எந்த வடிவத்திலும் எந்தச் செய்திகளையும் அனுப்பவேண்டாம் என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் ஏதேனும் செய்தியைப் பெற்றால் பதிலளிக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்ததுடன் அந்தச் செய்திகளை நகலெடுத்து நிர்வாகியுடன் பகிரும் படியும் கூறி ஒரு தொடர்பிலக்கமும் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாபாஜி குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்த தங்களாலான அனைத்து முயற்சிகளையும் அறக்கட்டளை செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

Gallery
Gallery

தொடர்புடைய செய்தி: