விபத்தால் ஏற்பட்ட பதற்றம் – கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி

0
163

பண்டாரகம – ஹொரண வீதியின் கொத்தலாவல சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், காரின் சாரதியை மிகக் கொடூரமான முறையில் தாக்கியதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்கப்பட்ட கார் ஓட்டுநர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

விபத்தால் ஏற்பட்ட பதற்றம் - கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி | Road Accidents In Sri Lanka Police Arrest

அத்துடன் விடாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அந்த காரை பலத்த சேதப்படுத்தியுள்ளார்.

தாக்குதல் சம்பவம்

பின்னர் அந்த பகுதியில் இருந்த மக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தால் ஏற்பட்ட பதற்றம் - கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி | Road Accidents In Sri Lanka Police Arrest

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் பண்டாரகம பகுதியிலிருந்து ஹொரணை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு திருப்பிய கார் மீது மோதி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.