இந்தியாவில் குற்றக்குழு தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா லக்னோ நீதிமன்றத்தில் நேற்று (07.06.2023) சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஒரு சிறுவனும் மற்றும் பொலிஸ் அதிகாரியும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் சட்டத்தரணிகளை போன்று உடை அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய குற்றக்குழுவின் தலைவராக செயற்பட்டு அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் கூட்டாளியான ஜீவா உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்த தலைவருமான பிரம் தத் திவேதி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.