பிள்ளையான் அழைத்ததால் கொழும்பிலிருந்து புறப்பட்டார் உதயகலா! வைரலாகும் ஓடியோ

0
280

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு சர்வ மக்கள் கட்சியின் தலைவி த. உதயகலா இடையே இடம்பெற்ற ஓடியோ கலந்துரையாடல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

குறித்த கலந்துரையாடலில்,

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த உதயகலா உங்கள் ஆட்கள் தேவையில்லாததை எழுதிக்கொண்டு இருக்கிறார்களா இல்லையா என தெரிந்துகொள்ள அழைப்பை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய சந்திரகாந்தன் நீங்கம் உத்தமியாக இருந்ததால் என்னை சந்திக்க வாங்க என உதயகலாவிடம் தெரிவித்துள்ளார், அதற்கு உதயகலா நான் உங்களை காண கட்சி அலுவலகத்திற்கு வந்து வெகு நேரம் காத்திருந்த நிலையில் என்னை சந்திக்க முடியாது என தெரிவித்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் உங்களை ஒருமுறை சந்திதேன் அப்போதே விளங்கிக்கொண்டே நீங்கள் ஒரு கள்ள புறப்போக்கு என அது இப்போது உறுதியாகி விட்டது என உதயகலாவிடம் பிள்ளையான் தெரிவித்துள்ளார்,

இதனையடுத்து முடிந்தால் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்து எங்களை சந்திக்கலாம் என பிள்ளையான் உதயகலாவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு உதயகலா தற்போது நான் கொழும்பில் இருக்கிறேன் கொழும்பில் இருந்து வந்தால் நீங்கள் மட்டக்களப்பில் இருப்பீர்களா என வினவியுள்ளார். பின்னர் பிள்ளையான் நான் இங்கே தான் இருப்பேன் வாங்கள் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.

குறித்த ஓடியோ இதோ…