உதிரி பாகங்கள் எனக் கூறி வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்த 5 வாகனம்

0
206

காரின் உதிரி பாகங்கள் எனக் கூறி ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப்களும் கார் ஒன்றும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை இலங்கை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 10 கோடி ரூபா மதிப்பு

இந்த 5 வாகனங்களின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபா என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்துக்கு வாகன உதிரிப்பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படவை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.