உலகப் புகழ் பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் (Sky diving) கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அண்மையில் இடம்பெற்றமை பார்வையாளர்களை பரவசபடுத்தியுள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் இந்த சாகச விளையாட்டு நடாத்தப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஸ்கை டைவிங்
இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
சாகச விளையாட்டுக்காக இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். நிகழ்வில் முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.
இந்தச் செயற்திட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் எனவும் இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.