சிரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவருடைய உடல் 2 நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பின்னர் கல்லறைக்கு கொண்டு செல்கையில் திடீரென உயிர் பெற்றெழுந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கிடையே இருந்து அஹமது என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட நிலையில் அவரை முறைப்படி அவரது உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக அவரது உடல் வைத்தியசாலை ஒன்றில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
இந்நிலையில் 2 நாட்களுக்குப் பின் அவரது உறவினர் ஒருவர் வந்து அவரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இறந்த உடலை வைக்கும் பை ஒன்றில் வைத்து அஹமதுவின் உடல் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அஹமதுவின் உடல் இறுதிச்சடங்குக்காக கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது போது திடீரென அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பை அசைந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பையைத் திறந்து பார்க்க அஹமது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அஹமதுவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.