துருக்கியில் 4 நாட்களுக்கு பிறகு செல்லப்பிராணி மீட்பு!

0
324

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நான்கு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய் மீட்கப்பட்டுள்ளது.

அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹடே மாகாணத்தில் இரத்த காயத்துடன் சிக்கித் தவித்த ‘பாமுக்’ என்ற நாயை, இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

முன்னதாக இதே பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டிருந்தது. அதேவேளை துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 24 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.