இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை!

0
483

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மீதான வட்டி வீத அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்திடம் கடன் பெறுவதற்கு அறவிடப்படும் பணத்தின் அளவு குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதனால் தேவையான தொகையை பெற அரசு அதிக அளவில் பத்திரங்களை விற்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் வசந்த அத்துகோரள இவ்வாறு தெரிவித்துள்ளார்.