2வது முறையாக அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட மலையாள பெண்!

0
417

அமெரிக்காவில் தொடர்ந்து 2-வது முறையாக மலையாளப் பெண் ஒருவர் நீதிபதி பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஆவார்.

கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம பாடசாலையில் படித்து வந்த இவர் இன்றைக்கு நீதிபதியாக உயர்ந்திருப்பது சுவாரசியமானது.

அமெரிக்க நீதிபதியாக 2-வது முறையாக பதிவியேற்ற மலையாளப் பெண்! | Malayalam Woman Julie Mathew Us Judge For 2Nd Time

இவரது தந்தை அங்கே தொழில் அதிபர். அவர் சில வழக்குகளை எதிர்கொண்டபோதுதான், இந்த பெண்ணுக்கு முதன்முதலாக சட்டம் படிக்கும் ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது.

பிலடெல்பியா மாகாணத்தில வளர்ந்த அவர் பென் மாகாண பல்கலைக்கழகத்திலும், டெலவாரே சட்ட கல்லூரியிலும் படித்து வழக்கறிஞர் ஆனார். 15 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதி ஆனார். இதன்மூலம் அங்கு முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெயரைப் பெற்றார்.

அமெரிக்க நீதிபதியாக 2-வது முறையாக பதிவியேற்ற மலையாளப் பெண்! | Malayalam Woman Julie Mathew Us Judge For 2Nd Time

இப்போது தொடர்ந்து 2-வது முறயைாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் பென்ட் கவுண்டியில் நீதிபதியாகி இருக்கிறார்.

இந்த பதவிக்காக நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய இவர், குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ டார்ன்பர்க்கை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார்.

இதன் மூலம் அங்கு இன்னும் 4 ஆண்டுகள் நீதிபதி பதவி வகிப்பார். கேரளாவில் தனது கணவரின் சொந்த கிராம வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி வழியாக போர்ட் பென்ட் கவுண்டி நீதிபதியாக அவர் பதவி ஏற்றார்.

இது தொடர்பில் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது,

அமெரிக்க நீதிபதியாக 2-வது முறையாக பதிவியேற்ற மலையாளப் பெண்! | Malayalam Woman Julie Mathew Us Judge For 2Nd Time

இந்த முறை நான் என் கணவர் வீட்டில் வைத்து பதவி ஏற்கத்தான் விரும்பினேன். இல்லாவிட்டால் இந்த நிகழ்வில் என் கணவர் குடும்பத்தார் பங்கேற்க முடியாமல் போய் இருக்கும். இந்த பதவி ஏற்பு விழாவில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுதான் எனது சிறந்த வேலை. அந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். என் கணவர், பெற்றோர் அனைவரும் எனக்கு மகத்தான ஆதரவு தந்து தூண்களாக திகழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த விழாவில் அவரது பெற்றோரும், மூத்த மகளும் அமெரிக்காவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இவரது கணவர் அமெரிக்காவில் தொழில் அதிபராக உள்ளார்.