திலினியின் மோசடி – பிரபல நடிகை விரைவில் கைது; சிறிசுமண தேரர்

0
346

திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் மேலும் இரு பிரபல நடிகைகள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 இவர்களில் ஒருவரிடம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகாத உரையாடல்கள்

திலினி பிரியமாலியின் ஒலி நாடாக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய, பிரபல நடிகை ஒருவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டது. இதன் போது, ​​அந்த ஒலி நாடாக்களில் இடம்பெற்றுள்ள தகாத உரையாடல்கள் தொடர்பில் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொரளை சிறிசுமண தேரரிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அச்சுறுத்திய பெண்

அதற்கமைய, பிரியமாலியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் சென்று பிரியமாலியிடம் சுமார் 75 கோடி ரூபாவை வைப்பிலிடுமாறும், அப்படிச் செய்யாவிட்டால் பெரும் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாகவும் சிறிசுமண தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியமாலியின் தங்கக் கட்டிகள் கடத்தல் தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சிறிசுமண தேரரிடம் தனியான விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.