எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே வரிசைகள்; கஞ்சன விஜேசேகர

0
481

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

எரிபொருள் விலைகுறித்து அமைச்சரின் அறிவிப்பு! | Minister S Announcement On Fuel Prices

அதேவேளை எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.        

https://www.taatastransport.com/