யாழ். பல்கலைக்கழக இன்றைய ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்கேற்றியுள்ளார்.
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளதோடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழுக்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா வரவேற்றுக்கொண்டார்.