சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பாடசாலை பேருந்துகள்..

0
471

வாகன உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த 5 பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச் சொந்தமான பேருந்துகளும் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பேருந்துகள் இடைநிறுத்தம் | Suspension Of School Buses

கொடக்கவெல டிப்போவுக்கு சொந்தமான குறித்த 5 பேருந்துகளுக்கு தேவையான என்ஜின் உதிரிப்பாகங்கள், கியர் பொக்ஸ்களின் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும், சில பேருந்துகள் குறித்த உதிரிப்பாகங்கள் பொறுத்தப்பட்டு திருத்தப் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் டயர், டியூப், பெட்டரி ஆகியவற்றை கொண்டு வந்து பாவனையிலிருந்து அப்புறுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.