இந்தியரின் புகைப்படத்தை பாராட்டிய ஆப்பிள் நிறுவன CEO… ஏன் தெரியுமா?

0
719

சமீபத்தில் ஒரு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட ஒரு எறும்பு முகத்தின் புகைப்படம் ஒட்டுமொத்த உலக இணையத்தையும் ஈர்த்தது. அதே போல தற்போது ஒரு இந்தியரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிளின் முதன்மைச் செயல் அதிகாரியாக டிம் குக் செயல்பட்டு வருகிறார். அவர் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து “தீபாவளி ஏன் ஒளிகளின் திருவிழாவாக இருக்கிறது என்பதை இப்படம் விளக்குகிறது” என டிவிட்டர் பதிவிலேயே பாராட்டினார். மேலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே பதிவில் “#ShotoniPhone by Apeksha Maker” எனப் புகைப்படம் எடுத்தவரின் பெயரையும் பகிர்ந்து இருந்தார். டிம் குக்கின் பதிவைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பார்க்கலாம்.

உண்மையிலேயே டிம் குக் பகிர்ந்த படம் ஐபோனில் தான் எடுக்கப்பட்டது என பல செய்தி வலை தளங்கள் உறுதி செய்கின்றன. அதோடு அபெக்ஸா மேகரும் டிம் குக்குக்கு நன்றி தெரிவித்து தன் இன்ஸ்டாகிராம் பதிவிலும் #ShotoniPhone என்பதைக் குறிப்பிட்டு இருந்தார்.

அபெக்ஸா மார்கர் ‘தி ஹவுஸ் ஆஃப் பிக்ஸல்ஸ்’ என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு முன் அவர் பல பெரிய பிராண்டுகளோடும், பல சினிமா நடிகர், நடிகைகளோடும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.