புலிகளின் புதையல் தோண்டும் பணி யாழில் இன்று ஆரம்பம்!

0
705

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியிருந்தனர்

நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்துள்ளதாகவும், அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.