இலங்கை பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அஹமட், “உலகின் மிக உயர்ந்த கல்வித் தகுதி மற்றும் தொழில் ரீதியில் தகுதியான நபர்” என்ற தலைப்பில் உலக சாதனை!

0
433

1994 நவம்பர் மாதம் 06ம் திகதி அப்துல் நாசர், சித்தி பரீனா ஆகியிருக்க மகனாக நுவரெலிய மாவட்டத்தில் பிறந்தார் பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அஹ்மத்.

சிறு வயதிலிருந்தே தன்னுடைய ஆளுமைகளை வளர்த்துக் கொண்ட இவர் கல்வி மற்றும் தொழில் முறைகளில் 435 சான்றிதழ்களும் இதில் 398 தொழில்முறை சான்றிதழ்களும், 23 டிப்ளமோ சான்றிதழ்கள், 10 உயர் தேசிய டிப்ளமோ சான்றிதழ்கள், 1 இளங்கலை பட்டம், 1 முதுகலை பட்டம், 2 முனைவர் பட்டங்கள் (உலக சாதனை படைத்தவர்) போன்றவற்றையும் பெற்றிருக்கின்றார்.

மேலும் இவர் உலகம் முழுவதும் உள்ள UN, HRC, WMA, ILO, Lawasia போன்ற 150 இற்கும் அதிகமான அமைப்புகளில் உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.

பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அஹமட் அவர்களுக்கு “மகாத்மா காந்தி அறக்கட்டளை” மூலமாகவும் தன் கடினமான முயற்சி உழைப்பினாலும் கீழ்கண்ட சாதனைகளையும் மற்றும் பட்டங்களையும் சொந்தமாக்கியுள்ளார். மேலும் நமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கௌரவங்களையும் பட்டங்களையும் பெற்ற முதல் இலங்கையர் ஆவார்.

01. இர்ஷாத் ஹோல்டிங்ஸின் CEO & நிறுவனர்.

02. உளவியல் மற்றும் ஆலோசனை மன்றத்தின் தலைவர்.

03. ஆங்கில சபையின் தலைவர்.

04. சேம்பர் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் தலைவர்.

05 கற்பித்தல் நிபுணத்துவ சேம்பர் தலைவர்.

06. ஹாக்வார்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர்.

07. மகாத்மா காந்தி அறக்கட்டளையின் இலங்கை இயக்குனர்.

08. உலகளாவிய அமைதி தூதர்

09. உலகின் சிறந்த 250 உளவியலாளர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார்.

10. உலகம் முழுவதிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியராக இருக்கின்றார்.


பேராசிரியர் இர்ஷாத் பெற்றுக் கொண்ட விருதுகள்

01. அமெரிக்கன் விருதுகள் 2022 “சர்வதேச திறமையான ஆளுமை விருது.

02. மகாத்மா காந்தி பேராசிரியர் விருது 2022.

03. சர்வதேச தலைமைத்துவ விருதுகள் 20222 “ஆண்டின் சிறந்த இளைஞர் ஐகான்.”

இலங்கை நாட்டிற்கும் நுவரெலிய மாவட்டத்துக்கும் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையினருக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டே இருக்கும் பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அஹ்மத் அவர்கள் மேலும் பல சாதனைகளை படைத்து எமது நாட்டின் எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த ஓர் முன்மாதிரியாக இருப்பார் என்ற நம்பிக்கையோடு அவர் மேலும் பல சாதனைகளையும் கெளரவங்களையும் பெற எமது வாழ்த்துக்கள்.