பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கைகள் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரன் அலஸ் மற்றும் மேற்கு மற்றும் தெற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இணைந்துள்ளனர்.