யாழில் பெட்ரோல் விற்காமல் தேக்கம்!

0
504

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கூடுதல் பெட்ரோல் இருப்பை உறுதி செய்த போதிலும் பெட்ரோல் விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கியூ.ஆர். முறை நடைமுறைக்கு வந்த பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் தேக்கமடைய ஆரம்பித்திருந்தது.

எனினும் நல்லூர் பெருந்திருவிழாக் காலத்தில் எரிபொருள் தேவை மக்களுக்கு ஏற்படும் என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கூடுதலான எரிபொருளை இறக்குமதி செய்து இருப்பை உறுதிப்படுத்திய போதிலும் பெட்ரோலின் விற்பனையில் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.