தண்டவாளத்தில் நடந்து சென்ற காதலர்களுக்கு நேர்ந்த கதி!

0
818

திருமணமான நபர் ஒருவரும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் தண்டவாளத்தில் பயணித்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதிய இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் குடும்பஸ்தரின் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் யுவதி ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கும் யுவதி நுவரெலியா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஹட்டன்- கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள சிங்கமலை சுரங்கத்துக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதான வயதானவர் என்றும் 17 வயது யுவதி டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் ரயில் பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த ரயிலில் மோதுண்டதில் இருவரும் கடும் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் ரயில் கட்டுபாட்டாளரால் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவ்விருவரும் வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.