19 வயது மகள் மீது இரு தடவைகள் காரை ஏற்றி கொலை செய்த நபர்

0
553

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர், 19 வய­தான தனது மகள் மீது இரு தட­வைகள் காரை ஏற்றி அவரை கொலை செய்­தமை தொடர்­பான வழக்கில் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

44 வய­தான நைஜல் மால்ட் எனும் நபரே குற்­ற­வா­ளி­யாக நீதி­மன்­றத்தால் அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.

இங்­கி­லாந்தின் நோர்போல்க் பிராந்­தி­யத்­தி­லுள்ள வீட்டில் வைத்து லொறீன் மால்ட் எனும் 19 வயது யுவதி காரால் மோதி கொல்­லப்­பட்டார்.

தனது மகள் லொறீன் மால்ட் மீதான ஆத்­தி­ரத்தில் அவரை நைஜல் மால்ட் மேர்­சிடிஸ் பென்ஸ் காரை ஏற்றி கொலை செய்தார் என முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. 

தனது மனைவி, பிள்­ளை­களைப் பிரிந்­தி­ருந்த நைஜல் மால்ட், தனி­யாக வேறு ஒரு முக­வ­ரியில் வசித்து வந்தார் என நோர்விக் கிறவுண் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வ­தினம் லொறீன் மால்ட்­டையும் அவரின் காத­ல­னையும் நைஜல் மால்ட் அச்­சு­றுத்­தினார். அதன்பின் தனது காரை பின்­பு­ற­மாக செலுத்தி, லொறினை மோதி வீழ்த்­தினார். பின்னர் லொறீன் மீது காரை செலுத்திச் சென்று நிறுத்தி, முன்­னோக்கி சென்றும் அந்த யுவ­தியின் மீது மீண்டும் காரை ஏற்­றினார் என சட்­டத்­தணி அண்ட்ரூ ஜாக்சன் நீதி­மன்­றத்தில் கூறினார். 

அதன்பின் அதே காரில் லொறீனின் உடலை ஏற்­றிக்­கொண்டு வைத்­தி­ய­சா­லைக்கு நைஜல் மால்ட் சென்றார். லொறீன் மால்ட் உயி­ரி­ழந்­து­விட்டார் என மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர்.

தனது மகளை தான் கொலை செய்­ய­வில்லை என நைஜல் மால்ட் மறுத்தார். அச்­சம்­பவம் ஒரு விபத்து என அவர் வாதா­டினார். எனினும் அவர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

நீகல் மால்ட் தன்னை தாக்­கி­ய­தாக அவரின் மனைவி 2021 ஏப்ரல் மாதம் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இது தொடர்­பாக கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே நைஜல் மால்ட் தனது மகள் மீது காரை செலுத்தி கொலை செய்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

நைஜல்; மால்ட்டுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.