வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

0
484

வெள்ளவத்தை விவேகானந்த வீதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு  உயிரிழந்தவர் 37 வயது மதிக்கதக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு அடுக்குமாடிகளைக் கொண் குடியிருப்பில் வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடியில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.