டீசல் ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையும்

0
487

40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாளை வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

எரிபொருளை ஏற்றி வரும் கப்பலுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.

பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றி வரும் மேலும் சில கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நாளாந்தம் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்கின்றனர்.

எரிபொருள் தாமதம் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.