கோட்டாவுக்காக காத்திருக்கும் சிங்கப்பூர் ஊடகவியலாளர்கள்!

0
566

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கையில் கமெராக்களுடன் ஊடகவியலாளர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாவுக்காக காத்திருக்கும்  சிங்கப்பூர் ஊடகவிய லாளர்கள்! | Singapore Journalists Waiting For The Gotabaya

அதேசமயம் மக்களின் போராட்டத்தால் மாலைதீவுக்கு நேற்றைய தினம் மனைவியுடன் தப்பியோடிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு அங்குள்ள மக்கள் போராட்டம் ஓன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.