பயணிகள்  புகையிரத சேவை வழமைக்கு….

0
291

பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரவித்துள்ளது.

பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் புகையிரத சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என நேற்றையதினம் புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ள நிலையில், பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.