நாளை முதல் அரசு கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசி

0
489

தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார்.

அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை இருந்தாலும் நாளை முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது ஏனைய அரிசி வியாபாரிகளும் இதே விலையில் அரிசியை வழங்க வேண்டும் என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.