உக்ரைன் போர்க் குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஷ்ய வீரர்

0
418

உக்ரைனில் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய படைவீரர் ஒருவர் நேற்று (18-05-2022) குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

21 வயதான சார்ஜென்ட் வாடிம் ஷிஷிமரின் வழக்கு, ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனால் நடத்தப்படும் முதல் போர்க்குற்ற விசாரணையாகும்.

பெப்ரவரி 24 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்த ரஷ்ய படையெடுப்பிற்கு சில நாட்களுக்குப் பிறகு கிழக்கு உக்ரைனில் ஒருவரை கொன்றதாக ஷிஷிமரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஷிஷிமாரின் மீது போர்க்குற்றம் மற்றும் திட்டமிட்ட கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ரஷ்ய படைவீரர் பொதுமக்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக உக்ரைன் அதிகாரிகள் முன்னதாக கூறியிருந்தனர்.

ஷிஷிமரின், 62 வயதான நபரை கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கியால் கொன்றதாக உக்ரைன் வழக்கறிஞர் கூறினார்.

அவரும் அவரது மற்ற நான்கு ரஷ்ய வீரர்களும் ஒரு காரைத் திருடிக்கொண்டு சுமி பகுதியில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர், அங்கு ஷிஷிமரின் அந்த நபரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய படைவீரர் தனது தாயாருக்கு நிதியுதவி வழங்க போராடுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் போதிலும் இது முதல் போர்க்குற்ற வழக்கு.

ஏற்கனவே 40 சந்தேக நபர்களுடன் 11,000 போர்க்குற்ற வழக்குகள் நடந்து வருவதாக உக்ரைனின் தலைமை வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார்.