பிரதமர் எடுக்கபோகும் முடிவு என்ன?..

0
779

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட  அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் பிரதமர்  இதன்போது தீர்மானம் மிக்க முடிவொன்றை அறிவிப்பார் என கூறப்படுகின்றது. 

புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் வரை தானே பிரதமராக இருப்பார் எனவும், நாடு மேலும் பாதாளத்தில் விழுவதைத் தடுப்பதற்காக புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.