கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்ட அறிக்கை

0
490

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இன்று காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தரால் மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைகழகத்தில் கடந்த 29 ம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து, குறித்த விரிவுரையாளரை தடுத்து மாணவர்கள் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பாக ஒருவாரத்தில் தீர்வு பெற்றுத்தரப்படும் என பல்கலைகழக நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும் அதில் உடனடியாக மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேறவேண்டும் என அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

Gallery
Gallery