இலங்கையில் நடப்பது குறித்து படு சோகமான பதிவு போட்ட நடிகை லாஸ்லியா- எமோஷ்னல் பதிவு

0
377

நடிகை லாஸ்லியா முதன் முதலாக தமிழ் மக்களுக்கு ஒரு இலங்கை செய்தி வாசிப்பாளராக தான் அறிமுகமானார். பின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.

பிக்பாஸிற்கு பிறகு

அந்நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த அவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டானார். இடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறி அதிக போட்டோ ஷுட்கள் நடத்தினார்.

அவரது அப்பா இறப்பு பெரும் சோகத்தை கொடுத்திருந்தது, தற்போது அதில் இருந்து மீண்டு தனது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

ப்ரண்ஷிப் படத்தில் நடித்து முடித்த லாஸ்லியா  கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்துள்ளார், விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

இலங்கை பிரச்சனை

இலங்கையில் கடும் பொருளாதார தட்டுப்பாடு நிலவு வருவது நம் அனைவருக்கும் தெரியும், இதுகுறித்து ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார் லாஸ்லியா. அதில் அவர், மோசமான போர்களை சந்தித்துள்ளோம், உறவுகளை இழந்தோம், சுனாமியை சந்தித்தோம், வெடி விபத்துகள் 2019ம் ஆண்டு நடந்தது, கொரோனா தாக்கியது இப்போது பொருளாதார தட்டுப்பாடு.

இது எங்களுடைய தவறு இல்லை, நான் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் இதையெல்லாம் சந்திக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் என பதிவு செய்துள்ளார்.