நாடு முழுவதும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்திற்கும் இரண்டு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன(Nilantha Premaratna) தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் நெருக்கடிகளாலும் மோதல்களாலும் இவ்வாறு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டிருந்தார்.
இராணுவம் எரிபொருள் விநியோகத்தை மட்டுமே கண்காணிக்கும், விநியோகத்திற்கு உதவாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.