பதவியில் இருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர்!

0
381

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா (Nimal Lanza) தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லான்சா கிராமப்புறசாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறையின் இராஜாங்க அமைச்சராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

விமல் வீரவங்க தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர, களஞ்சிய வசதிகள், கொள்கலன் மற்றும் துறைமுக விநியோக வசதிகள் மற்றும் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பின்னரே பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.