இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள்: நேற்று 892 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

0
379

இலங்கை நாளொன்றில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவானது. நேற்று (28) 892 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில், 852 பேர் பேலியகொட கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய 33 பேர் மற்றும் ஓமானில் இருந்து திரும்பிய 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,586 ஆக அதிகரித்தது.

இதேவேளை, ஒரே நாளில் அதிகமானவர்கள் குணமடைந்த நாளாகவும் நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. நேற்று 1,869 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,435 ஆக உயர்ந்தது.

தற்போது COVID-19 க்கு 6,854 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 688 சந்தேகத்திற்குரியவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.