உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock
கீவ் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நபர் ஒருவர் சவப்பெட்டியில் வைத்து சிலரை உயிரோடு புதைத்துள்ளார்.அவரருகில் 12 வெறுமையான சவப்பெட்டிகள் இருந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் பொலிஸிற்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் வந்து விசாரித்து போது தான் புதைத்த நபர் சைக்காலஜி மருத்துவர் என்பதும் இந்த விடயத்தை தன்னுடைய நோயாளிகளுக்கு அவர் தொடர்ந்து செய்வதும் தெரியவந்தது.
அதாவது, சவப்பெட்டியில் படுக்க வைத்து இரண்டு மணி நேரத்துக்கு நோயாளிகள் புதைக்கப்படுகிறார்கள். பெட்டியில் சிறிய ஓட்டை போட்டு ஒரு பைப் சொருகப்படுகிறது. இதன் மூலம் சவப்பெட்டியில் இருப்பவர்கள் சுவாசிக்க முடியும்.
இரண்டு மணி நேரங்கள் கழித்து வெளியில் வந்தால் தங்களின் மனது புத்துணர்ச்சி பெற்று புதுமனிதர்களாக மாறிவிடுகிறோம் என நோயாளிகள் தெரிவிக்கிறார்கள். இந்த விடயத்தில் முறைதவறிய செயல்கள் எதுவும் பின்பற்றப்படாத நிலையில் பொலிஸார் குறித்த மருத்துவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
tags :- Psychotherapy’s treatment stress act people shock
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!
- நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி
- 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்
- உலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது!
- நிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்
- 162 கிமீ வேகத்தில் சீனாவை தாக்கவரும் ‘மங்குட்’ புயல்!
- அமெரிக்காவை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ பயங்கர புயல் வானியல் துறை எச்சரிக்கை
எமது ஏனைய தளங்கள்