கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0
613
death body recovered wall mullaithivu puthukudiruppu Lankan news

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. death body recovered wall mullaithivu puthukudiruppu Lankan news

78 வயதுடைய பெண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பெண்ணின் மகன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் நீர் எடுப்பதற்காக சென்ற ஒருவர் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாரிடம் அறிவித்ததை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
death body recovered wall mullaithivu puthukudiruppu Lankan news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites