இங்கிலாந்தின் துர்ஹாம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்தது. child saved mother’s life England tamil news
தன்னுடைய தாயார் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்ட 4 வயது சிறுமி, ஒன்றும் புரியாமல் அழுது தவிக்காமல், தொலைபேசியில் ‘999’ என்ற அவசர உதவி அழைப்பு எண்ணில் அழைத்துள்ளார்.
எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், தனது அம்மா ‘தூக்கத்தில்’ இருப்பதாகவும், ஆனால் தலையில் இருந்து ரத்தம் வழிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், சிறுமியின் குடும்பப் பெயரை கேட்டபோது, அது தனக்குத் தெரியாது, ஆனால் தனது செல்லநாயின் பெயர் மாக்ஸ் எனக் கூறியுள்ளார்.
அதையடுத்து தகவலைத் திரட்டிய பொலிஸார், சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். பொலிஸாரை வீட்டினுள்ளே அனுமதித்த சிறுமி, அவர்களிடம் நடந்தவற்றை மீண்டும் சொல்லி இருக்கிறார்.
இதற்கிடையே மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து, மயக்கமுற்றுக் கிடந்த சிறுமி தாயாரை மீட்டனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் உரிய சிகிச்சை பெற்று நலமடைந்திருக்கிறார்.
அந்தப் பெண்மணி ஏலன் ஓசெல்டோனின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டதால் அவர் படிக்கட்டு ஏறும்போது நிலை தடுமாறி விழுந்திருக்கிறார்.
“எனது மகள் மிலா டோபி மட்டும் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் தற்போது நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்” என கண்கலங்கக் கூறினார் இளம் தாய் ஏலன்.
இதற்கிடையே தொலைபேசியில் சிறுமியின் 6 நிமிட உரையாடலை துர்ஹாம் பொலிஸார் சமூக ஊடகங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம், அந்தச் சிறுமிக்கு போலீஸ் துறை சார்பில் துணிச்சலான செயல்பாட்டுக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் சமூக வலைதளவாசிகளும் சிறுமி டோபியின் செயலைப் பாராட்டி புகழ் மாலை சூட்டி வருகின்றனர்.
tags ;- child saved mother’s life England tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்த பிரிட்டன்..
- லண்டனில் பாதுகாப்பு தீவிரம் – மேயர் தெரிவிப்பு
- பிரித்தானியா கார் விபத்தில் பலர் படுகாயம்
- பிரித்தானியா மான்செஸ்டர் நகரில் துப்பாக்கி சூடு : 10 பேர் காயம்
- இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு